Posts

Showing posts from August, 2026

படைப்பாற்றலைப் பணத்தால் வாங்க முடியாது — ஹயாவோ மியாசாகி

Image
  நேர்காணலாளரின் அறிமுகம் 1941-ல் பிறந்த ஹயாவோ மியாசாகி, உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் கார்டூனிஸ்டாக வேண்டும் என்று விரும்பினார். கல்லூரிப் படிப்பை முடித்ததும், அனிமேஷன் தயாரிப்பு நிறுவனமொன்றில் சேர்ந்தார். 1984-ல் அவர் உருவாக்கிய Nausicaä of the Valley of the Wind திரைப்படம், அனிமேஷன் திரைப்படங்களுக்கான நீண்டகால சாதனையைப் படைத்தது. 1988-ல் அவர் இயக்கிய My Neighbor Totoro , அந்த ஆண்டில் அதன் பிரிவுக்குக் கிடைத்த பெரும்பாலான விருதுகளை வென்றது; அவற்றில் கல்வி அமைச்சரின் விருதும் அடங்கும். மிக நுட்பமான, கவனமான அவதானிப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் பின்னணிக் காட்சிகளுக்காகவும், அவரது சூழலியல் அணுகுமுறைக்காகவும் மியாசாகி அறி யப்படுகிறார். இன்றைய நிலையில் அவர் பெரும் பார்வையாளர்களை ஈர்க்கும் இயக்குநராகத் திகழ்கிறார். திரைப்படங்களைத் தயாரிப்பதைவிட, அவற்றின் உரிமைகளை வாங்குவது மலிவாக இருக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். திரைப்படம் தயாரிப்பதில் ஏற்படும் அத்தனை சிக்கல்களையும் எதிர்கொள்வதைவிட, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வாங்கிக்கொள்வது பல நேர...

மனித நிலையும் அந்நியமாதலும் | அப்துல் ரஹ்மான்

Image
‘எந்திரங்கள் பெருந்த அளவில் பயன்படுத்தப்படுவதாலும், பொருள் உருவாக்கத்திற்கான உழைப்பு வெவ்வேறு உட்பகுதிகளில் பிரித்தளிக்கப்படுவதாலும் பாட்டாளிகளின் பணித்திறன் அனைத்துத் தனிசிறப்புகளையும் இழந்துவிட்டது. அதைத் தொடர்ந்து பணித்திறன் சிறந்த உழைப்பாளி மீதான ஈர்ப்பும் இல்லாது போய்விட்டது. அவன் எந்திரத்தின் ஓர் அங்கமாகிப் போகிறான். அவனது உழைப்பு என அவனிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதெல்லாம் மிகமிக எளிதான, மாற்றமே இல்லாத ஒருபுறத்தான பணியை, அதைச் செய்வதற்கான நுட்பத்தை எளிதாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்பது மட்டுமே’ கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை காட்சி 1: அவள் : எனக்கு நான் வேலை பாக்குற அலுவலகத்துல ஒரு Belonging Feel வரல. அவன் : அப்படியா? அவள் : ஏதோ இது எனக்கான இடம் இல்ல, என் கூட வேலை பாக்குறவங்க எனக்கான ஆளுங்க இல்லன்னு தோணுது. அவங்க கூட என்னால கனெக்ட் பண்ணிக்க முடியல. காட்சி 2 : அவன் : நீ பாக்குற வேலை உனக்கு திருப்தியா இருக்கா? இவன் : என்ன இப்படி கேட்டுட்ட.. திருப்தியா தான் இருக்கு. நான் இந்த ஐ.டி வேலைல இருக்குறதால தான் என்னால நான் நினைக்குற பொருட்கள் எல்லாம் வாங்க முடியுது. நான் நினைச்ச இடத்துக்கு போக ...

Esthappan - A Man with Thousand Faces

Image
அரவிந்தனின் Esthappan  ஒரு தனிமனிதனைப் பற்றிய கதை என்பதை விட அது ஒட்டுமொத்த சமூக மனதின் பிரதிப்பலிப்பு என்று கூறுவதே இங்கு பொருத்தமானதாக இருக்கும் யாரும் எஸ்தப்பனை நேரடியாக அறிமுகப்படுத்துவது இல்லை. ஒவ்வொருவரும் தங்களுடைய எஸ்தப்பனைச் சொல்கிறார்கள். அது பெரும்பாலும் அவர்கள் கேட்டவையோ அல்லது பார்த்தவையோதான். திருடனுக்கு அவன் கருணை உள்ளவனாகவும், குழந்தைகளுக்கு அவன் அற்புதம் நிகழ்த்துபவனாகவும், சிலருக்கு அவன் புனிதராகவும், மற்றும் சிலருக்கு அவன் வித்தியாசமானவனாகவும் வெளிப்படுகிறான்.சிலர் அவனை திருடனாகவும் போலியானவன் என்றும் ஒதுக்கி வைக்கிறார்கள். இவை அனைத்தும் ஒரே மனிதனைப் பற்றிய வெவ்வேறு கதைகள். அரவிந்தன் இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்கிறார். “மனிதர்கள் உண்மையை விடக் கதைகளோடு நெருங்கி வாழ்கிறார்கள்.” ஒரு கதை, குறிப்பாக பல அடுக்குகளை பொதிந்து வைத்திருக்கும் ஒரு கதை, ஒரு சாதாரண நிகழ்வை அற்புதம் என்றும் சொல்லும்போது, அது வெறும் சம்பவமாக இருப்பதை நிறுத்திவிடுகிறது. அது ஒரு நம்பிக்கையின் அடையாளமாக மாறத் தொடங்குகிறது. புராணம் என்பது பொய் அல்ல; அது ஒரு சமூகத்தின் உளவியல் தேவையின் வெளிப...

Esthappan Screening

Image
I consider Esthappan screening to be of great importance. G. Aravindan played a pivotal role in the evolution of 'Slow Cinema' - not just within Indian cinema, but in the broader context of the genre's emergence.  Our post-screening conversations are often celebratory, with frank criticism and deep insights.

அறிவியலால் வழங்க முடியாததை மதம் நமக்கு என்ன வழங்குகிறது? | Stephen T. Asma

மதத்தை ஆதரித்துப் பேசுவது இன்று எளிதான காரியம் அல்ல. நாத்திகர்களும் அறிவுஜீவிகளும் மட்டுமல்ல, பொதுமக்களிடையேயும் நவீன வாழ்க்கையின் பெரும்பாலான துறைகளில் மதத்தின் மீதான மரியாதை குறைந்துவிட்டது. மேலும், அடுத்த தலைமுறையினர், சமீபத்திய வரலாற்றில் எந்த மதத்துடனும் தங்களை இணைத்துக்கொள்ளாதவர்களின் மிகப் பெரிய தலைமுறையாக உருவாகக்கூடும் என்று தெரிகிறது. இந்த அதிருப்திக்கு சில நியாயமான காரணங்களும் உள்ளன: பாதிரியார்களும் மதகுருமார்களும் மேற்கொண்ட பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வருவது; ‘மதநம்பிக்கையற்றவர்களுக்கு’ எதிராக நடத்தப்படும் ஜிஹாத் வன்முறைப் பிரச்சாரங்கள்; மேலும், பன்முகத்தன்மைக்கும் மதச்சார்பற்ற கலாச்சாரத்திற்கும் எதிராக சில கிறிஸ்தவக் குழுக்கள் காட்டும் பகைமை. இவ்வாறு தவறான நடத்தைகளும், அவற்றைச் சுற்றியுள்ள எதிர்மறையான செய்திகளும் ஒன்றிணைந்து, “மனித முன்னேற்றத்திற்காக நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த செயல், மதநம்பிக்கைகளைப் படிப்படியாகக் குறைத்து, முடிந்தால் முற்றிலுமாக ஒழிப்பதே” என்ற பரிணாம உயிரியலாளர் இ. ஓ. வில்சனின் கருத்தை பலரும் ஏற்றுக்கொண்டு மீண்டும் கூறும் நிலையை ...